/tamil-ie/media/media_files/uploads/2019/07/Rain-in-Kerala3.jpg)
Chennai weather updates Heavy rainfall thunderstorm warning : தமிழகத்தில் எப்போது துவங்குகிறது வடகிழக்கு பருவமழை என்பது துவங்கி தண்ணீர் தட்டுப்பாட்டினை சரி செய்ய மழை நீர் சேகரிப்பை எப்படி முறைப்படுத்துவது என பல்வேறு எண்ணங்கள் உங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை அறிவோம். இன்று மழை வருமா வருதா என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் கூறும் தகவல்கள் குறித்து ஒரு பார்வை.
கனமழை எச்சரிக்கை பெறும் பகுதிகள்
இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம் மற்றும் தருமபுரி போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை
சென்னையைப் பொறுத்தவரை வானம் தெளிவாக காணப்படும். சில இடங்களில் மேகங்கள் கூடி மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸும் நிலவக்கூடும். இதே வானிலை நாளையும் தொடரும்.
மேலும் படிக்க : நீங்கள் ஆவலோடு காத்திருந்த வடகிழக்கு பருவமழை தொடக்கம்
நேற்று அதிகபட்ச மழைப்பொழிவை பெற்ற இடங்கள்
கோவையின் சின்னக்கல்லாறு பகுதியில் நேற்று 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது
தருமபுரியின் பாப்பிரெட்டிபட்டி மற்றும் நாமக்கல் பகுதியில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது
விருதுநகரின் திருச்சுழி, கோவையின் மேட்டுப்பாளையம், நீலகிரியின் நடுவட்டம் ஆகிய பகுதியில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளாது
கோவையின் சூலூர், வால்பாறை தாலுக்கா அலுவலகம், பென்னாகாரம், காஞ்சியின் தாம்பரம் பகுதியில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.