சென்னையில் வெள்ள நீரில் சிக்கிய குடும்பத்தை மீட்ட இளைஞர், உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை அதிகமாக பாதித்துள்ளது. பல்லாவரம், சோழிங்கநல்லூர், வட சென்னை, மடிப்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மழை தண்ணீர் இன்னும் வடிவில்லை. மேலும் மீட்பு குழுவினர், மழை நீரில் சிக்கி உள்ள மக்களை மீட்டு வருகின்றனர். பல இடங்களில் மக்கள் உணவின்றி, தண்ணீரின்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணையில் 15 அடி வெள்ளநீரில் தாய், தந்தை மற்றும் தங்கை சிக்கி இருந்தனர். இவர்களது மகன் அருண் இவர்களை மீட்க முயற்சி செய்துள்ளார். மேலும் இவர்கள் மூவரை அவர் மீட்டுள்ளார். ஆனால் அந்த இளைஞர் வெள்ளநீரில் சிக்கி உயிரிழந்துள்ளார். இவரது உடல் 3 நாட்களுக்கு பிறகு வெள்ளநீரில் மிதந்து வந்துள்ளது. இந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“