Advertisment

Chess Olympiad 2022 | சென்னையில் போக்குவரத்து மாற்றம்: தவிர்க்க வேண்டிய வழிகள் இங்கே

44th Chess Olympiad 2022: தமிழகத்தின் செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் அடங்கிய பிரமாண்ட தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் ஜூலை 28ஆம் தேதி பங்கேற்கின்றனர்.

author-image
WebDesk
New Update
Traffic diversions in Chennai

Traffic diversions in Chennai

ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜூலை 28-ம் தேதி நடைபெறவுள்ள 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவை முன்னிட்டு, புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களில் நகரின் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர்.

Advertisment

மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி கிராமத்தில் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ளது.

தமிழகத்தின் செழுமையான கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை உள்ளடக்கிய மாபெரும் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதனை முன்னிட்டு ஈவிஆர் சாலை, சென்ட்ரல் சதுக்கம், அண்ணாசாலை, ராஜா முத்தையா சாலை மற்றும் ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்று சென்னை காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் தேவை ஏற்படின் டிமலஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் ராஜா முத்தையா சாலை வழியாக அனுமதிக்கப்பட மாட்டாது. அதேபோல் ஈவிகே சம்பத் சாலை, ஜெர்மயா சாலை சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

வணிக நோக்கிலான வாகனங்கள் ஈவெரா சாலை கெங்குரெட்டி சாலை சந்திப்பு, நாயர் பால சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அதேபோல் பிராட்வேயிலிருந்து வருகின்ற வணிக நோக்கிலான வாகனங்கள் குறளகம், தங்கசாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கித் திருப்பிவிடப்படும்.

இந்த வாகனங்கள் வியாசர்பாடி மேம்பாலம் வழியாகச் சென்று தங்கள் வழித்தடங்களை அடையலாம். எனவே, வாகன ஓட்டிகள் மேற்கண்ட சாலை வழித்தடங்களைத் தவிர்த்துப் பிற வழித்தடங்களைப் பயன்படுத்தக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வரவேண்டிய பொதுமக்கள் முன்கூட்டியே, பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்னதாக, பிரதமர் மோடி சென்னைக்கு வருவதை முன்னிட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், 22,000 பணியாளர்களை ஈடுபடுத்தியுள்ளதாகவும் கிரேட்டர் சென்னை காவல்துறை அறிவித்தது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144வது பிரிவின் கீழ் ஜூலை 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நகர எல்லையில் ஆளில்லா விமானங்கள் மற்றும் பிற டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகர காவல்துறை ஆணையரின் கீழ் நான்கு கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்/டிஐஜி தரத்தில் 7 அதிகாரிகள் மற்றும் துணை ஆணையர் அந்தஸ்தில் 26 அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Chess
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment