/indian-express-tamil/media/media_files/2025/05/27/AiNtWNDsWbLInJBuB5cp.jpg)
சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்துவதும், பழுதடைந்து போன கொடிமரத்தை மாற்றி அமைக்கவும் பொது தீட்சிதர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சப் - கலெக்டர் தலைமை நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்துவதும், பழுதடைந்து போன கொடிமரத்தை மாற்றி அமைக்கவும் பொது தீட்சிதர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சப் - கலெக்டர் தலைமை நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்துவதும், பழுதடைந்து போன கொடிமரத்தை மாற்றி அமைக்கவும் பொது தீட்சிதர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சப் - கலெக்டர் தலைமை நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்துவதும், பழுதடைந்து போன கொடிமரத்தை மாற்றி அமைக்கவும் பொது தீட்சிதர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சப் - கலெக்டர் தலைமை நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்தவும், பழுதடைந்துபோன கொடி மரத்தை மாற்றி அமைக்கவும் பொது தீட்சிதர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வலியுறுத்தி தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் அதன் நிறுவனத் தலைவர் ஜெமினி எம்.என் ராதா மே 28-ம் தேதி காலை 11 மணி அளவில் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிப்பு போராட்டம் நடத்து உள்ளதாக அறிவித்தார்.
இந்நிலையில், நேற்று (மே 26) பிற்பகல் 4 மணி அளவில் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவன தலைவர் ஜெமினி ராதா மாநிலத் துணைத் தலைவர்கள் ஆர். சம்பந்த மூர்த்தி செல்வகுமார், மாநில பொதுச் செயலாளர் வேல்முருகன், சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ரமேஷ் உதவி ஆய்வாளர் பரணி, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர், ஸ்ரீ சபாநாயகர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் நடராஜ ரத்தின சபாபதி தீட்சிதர், சோமகார்த்திகேயன் தீட்சிதர், ஆபத்சகாய தீட்சிதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்துவதும் பழுதடைந்து போன கொடிமரத்தை மாற்றி அமைக்க பொது தீட்சிதர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஜெமினி எம்.என் ராதா கோரிக்கை வைத்தார். பிரமோற்சவம் நடத்துவது தொடர்பாகவும் கொடிமரம் மாற்றுவது தொடர்பாகவும் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், மேற்படி நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதற்கேற்றவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வட்டாட்சியரால் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக மே 28 -ம் தேதி காலை 11 மணி முதல் 12 மணி வரை சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த இருந்த தீக்குளிப்பு போராட்டம் கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு போராட்டக் குழுவினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.