சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணி ஓய்வு பெற்றார். இவரை தொடர்ந்து, மூத்த நீதிபதிகள் எம். துரைசாமி, டிராஜா ஆகியோர் பொறுப்பு தலைமை நீதிபதிகளாக இருந்து பணி ஓய்வு பெற்றனர்.

இதைத்தொடர்ந்து, 2023 ஏப்ரல் மாதத்தில் மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ய் வி. கங்காபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவரிடம் பரிந்துரை செய்யப்பட்டது. அவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தலைமை நீதிபதியாக அவர்  2023 மே, 28ம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அவர் நாளையுடன் ஓய்வு பெறுகிறார்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி மகாதேவன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்.மகாதேவன் வழக்கறிஞராக 1986ம் ஆண்டு சட்ட பணியை தொடங்கினார். சிவில், கிரிமினல் வழக்குகளில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். மத்திய, மாநில அரசுகளின் வழக்கறிஞராகவும் இவர் பணியாற்றி உள்ளார். மேலும் 24ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் பணியாற்றுவார்.  

Advertisment
Advertisements

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: