அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு: ரூ.2,500 கோடி கூடுதல் செலவினம்!

தழிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்த்தி உள்ளது. இதன்மூலம் 16 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள். மேலும் அரசுக்கு கூடுதலாக ரூ.2 ஆயிரத்து 546.16 கோடி செலவினம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தழிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்த்தி உள்ளது. இதன்மூலம் 16 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள். மேலும் அரசுக்கு கூடுதலாக ரூ.2 ஆயிரத்து 546.16 கோடி செலவினம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
CM MK Stalin

தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தழிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் அறிக்கையில், "மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் பெரும்பணியில் அரசோடு இணைந்து பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது.

Advertisment

நிதி நெருக்கடி

முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.

அரசு உறுதி

Advertisment
Advertisements

அந்த வகையில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கனிவுடன் பரிசீலித்து மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை செயல்படுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது.

அகவிலைப்படி உயர்வு

தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 2023ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

அரசுக்கு ரூ.2500 கோடி இழப்பு

இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2546.16 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்" என குறிப்பிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: