/indian-express-tamil/media/media_files/2025/11/02/ration-shop-2-2025-11-02-17-27-51.jpg)
முதியோர்களின் வயது வரம்பில் முக்கிய மாற்றம் செய்து கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. Photograph: (Representational Image)
தமிழ்நாட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்த சூழலில், முதியோர்களின் வயது வரம்பில் முக்கிய மாற்றம் செய்து கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. அதாவது, 70 வயது என்பதை 65 வயதாக மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் சென்னை மண்டலம் சா.பாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
நவம்பர் 2025, திங்கள்கிழமை 03.11.2025 முதல் 06.11.2025 வரை சென்னையிலுள்ள அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையார், திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய 15 மண்டலங்களில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் 990 நியாயவிலைக்கடைகளின் விற்பனையாளர்கள், அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்திரவிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை அனைத்து நியாய விலைக்கடைகளிலும் பொது மக்கள் அறியும் வகையில் தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திகொள்ள வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us