Advertisment

வெம்பக்கோட்டை அகழாய்வு பணிகள்: சிறுவர்களின் விளையாட்டு பொருட்கள் அதிகளவில் கண்டெடுப்பு

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணியில், குழந்தைகள் பயன்படுத்திய விளையாட்டு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Vembakottai

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisment

இப்பகுதியில் இதுவரை தோண்டப்பட்ட 18 குழிகளில் இருந்து உடைந்த நிலையில் சூடு மண் உருவ பொம்மை, வட்ட சில்லு, தங்க மணி, சூது பவள மணி உட்பட 3,280-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, தற்போது இரண்டு குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

இதில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு பணியில், பெண்கள் பாண்டி விளையாட பயன்படும் வட்ட சில்லுகள் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் வசித்த முன்னோர்கள்  தொழிற்கூடங்கள் நடத்தியதற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்து வருகின்றன. அதேபோல், பொழுதுபோக்கிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் தான், வட்ட சில்லுகள் அதிகளவு கிடைத்ததாக அகழாய்வு தள இயக்குநர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Tamilnadu Government Virudhunagar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment