சுவருக்கு அடியில் சிக்கிய தொழிலாளர்கள்: மரண ஓலத்தை நேரில் கேட்ட சிறுவர்கள்!

தனியார் கல்லூரியில் சுற்றுசுவர் இடிந்து விழுந்து நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தை சிறுவர்கள் சிலர் நேரில் பார்த்துள்ளனர்.

தனியார் கல்லூரியில் சுற்றுசுவர் இடிந்து விழுந்து நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தை சிறுவர்கள் சிலர் நேரில் பார்த்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
children who witnessed the Coimbatore wall collapse accident

கோவை தனியார் கல்லூரியில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் சுற்றுச்சுவர் கட்டுமான பணியின் பொழுது சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து குனியமுத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் சுவர் இடிந்து விழுந்ததை நேரில் பார்த்த அங்கு விளையாடிக் கொண்டிருந்த அப்பகுதி சிறுவர்கள் சாதிக் மற்றும் ஃபாசில் கூறுகையில், “நாங்கள் இங்கு விளையாடிக் கொண்டிருந்த பொழுது அங்கு கம்பிகள் எல்லாம் விழுவதை பார்த்தோம், அதனைப் பார்த்து அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து விட்டு விட்டோம்.

அங்கு அழுகின்ற சத்தங்கள் கேட்டது. உடனடியாக அங்கு ஓடி சென்று பார்க்கையில் ஒருவரின் கால் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தது.
இன்னொருவரின் தலை மட்டும் இடிபாடுகளில் இருந்து வெளியில் தெரிந்தது. அதன் பிறகு தான் காவல்துறையினர் மீட்பு பணி துறையினர் வந்து இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களை வெளியில் எடுத்தார்கள்” எனத் தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பேட்டி

“இந்த விபத்தில் சம்பவ இடத்திலே நான்கு பேர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் மருத்துவ சிகிச்சையின் போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Advertisment
Advertisements

அதன் காண்ட்ராக்டர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து காவல்துறையினர் அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்வார்கள்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம். கல்லூரி நிர்வாகமோ காண்ட்ராக்டரோ, விசாரணை முடிக்கப்பட்ட பிறகு யார் மீது தவறு உள்ளதோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்பொழுது நடைபெற்று வரும் இப்பணிகளுக்கு கல்லூரி நிர்வாகம் தரப்பில் இருந்து அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும். யார் மீது தவறு இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ” என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கூறினார்.

செய்தியாளர் பி ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: