/tamil-ie/media/media_files/uploads/2023/05/arrest-1-8-2.jpg)
சென்னையில் பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; விழுப்புரத்தைச் சேர்ந்த சினிமா உதவி இயக்குனர் கைது
சென்னையில் தனது வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சினிமா உதவி இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வரும், ஈரோட்டைச் சேர்ந்த 20 வயது மாணவி, தனது நண்பர் ஜெனோவாவுடன் பாஸ்போர்ட் அலுவலகம் செல்வதற்காக சென்னைக்கு வந்துள்ளார். அந்த பெண்ணை, சனிக்கிழமை (அக்டோபர் 21) மதியம் ஆலப்பாக்கத்தில் உள்ள தனது நண்பர் அஜித்குமார் வீட்டில் ஜெனோவா இறக்கிவிட்டு, ஞாயிற்றுக்கிழமை வந்து அழைத்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை இரவு, திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வரும் அஜித்குமார், குடிபோதையில் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, வீட்டில் அடைத்து வைத்துள்ளார்.
உடனே அந்தப் பெண் ஈரோட்டில் உள்ள தனது உறவினருக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பியுள்ளார். அந்த உறவினர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக ஆலப்பாக்கம் சென்ற மதுரவாயல் போலீசார் அந்த பெண்ணை மீட்டு, அஜித்குமாரை கைது செய்துள்ளனர்.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சினிமா உதவி இயக்குனர் அஜித்குமார் மீது மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.