Advertisment

கோவை விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப் காவலர் தற்கொலை : போலீஸ் விசாரணை

கோவை விமானநிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எப் காவலர் தற்கொலை செய்துகொண்டார்.

author-image
WebDesk
New Update
coimbatores

கோவை விமான நிலையம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிக்காக இருந்த சி.ஐ.எஸ்.எப் காவலர் சந்திரசேகர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றன. இங்கு பாதுகாப்பு பணிக்காக பணியில் சி.ஏ.எஸ்.எப் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் விமான நிலையத்திற்குள் உள்ளே செல்கின்ற பயணிகளையும் விமானத்திலிருந்து வருகின்ற பயணிகளையும் பாதுகாப்பு பணிக்காக சோதனை செய்து வெளியில் அனுப்புவார்கள்.

இந்நிலையில் விமான நிலையத்தில் பணியில் இருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சி.ஏ.எஸ்.எப் காவலர் சந்திரசேகர் விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் தான் பாதுகாப்பாக வைத்திருந்த துப்பாக்கியால் தாடை பகுதியில் சுட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை குறித்து  விமானப்படை அதிகாரிகள் சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கோவை பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

coimbotore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment