/indian-express-tamil/media/media_files/2025/01/22/gablYhCXeaHScCxJxc8K.jpg)
தமிழகம் முழுவதும் சி.ஐ.டி.யு போக்குவரத்து தொழில் சங்கம் சார்பில் DA பண பலன், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது, ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்துவது, மருத்துவ காப்பீடு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை, காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு கோவை மாவட்ட சி.ஐ.டி.யுவினர் 100க்கும் மேற்பட்டோர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராடத்தில் ஈடுப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு தி.மு.க அரசை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
செய்தி: பி.ரஹ்மான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.