தமிழகம் முழுவதும் சி.ஐ.டி.யு போக்குவரத்து தொழில் சங்கம் சார்பில் DA பண பலன், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது, ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்துவது, மருத்துவ காப்பீடு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/01/22/5TTl7UZ5UvB44PpOPJay.jpeg)
அதன் ஒரு பகுதியாக கோவை, காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு கோவை மாவட்ட சி.ஐ.டி.யுவினர் 100க்கும் மேற்பட்டோர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
/indian-express-tamil/media/media_files/2025/01/22/pTWgRgUmHAoLXGHNu0rY.jpeg)
போராடத்தில் ஈடுப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு தி.மு.க அரசை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
செய்தி: பி.ரஹ்மான்