Advertisment

தேர்தல் பிரச்சாரத்தில் திமுக - எஸ்டிபிஐ தொண்டர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு!

வழக்குப்பதிவு செய்ய போலீசார் காலதாமதம் செய்வதாக குற்றஞ்சாட்டினர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
திமுக vs எஸ்டிபிஐ

திமுக vs எஸ்டிபிஐ

திமுக vs எஸ்டிபிஐ : சென்னையில் மத்திய சென்னை தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட போது திமுக மற்றும் அமமுக கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ தொண்டர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Advertisment

மக்களவை தேர்தல் நாள் நெருங்கி விட்ட நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் சென்னை மத்திய சென்னையில் திமுக மற்றும் அமமுக கட்சியினர்ட் ஒரே நேரத்தில் வீதி வழியாக தேர்தல் பிரச்சாரம் செய்துக் கொண்டிருந்தனர்.

அமைந்தகரை பகுதியில், அமமுக கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் தெகலான் பாகவிக்கு தொண்டர்கள் வாக்கு சேகரித்தனர். அப்போது, அதே பகுதியில் திமுக நிர்வாகிகளும் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது.

அப்போது, திமுகவைச் சேர்ந்த சுமார் 10 பேர், எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த பெண்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, திமுக நிர்வாகி மீது அமைந்தகரை காவல் நிலையத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் புகார் அளித்ததால் நேற்று இரவு 11 மணி அளவில் திமுகவினர் திரண்டனர்.இதுபோல, அமமுக மற்றும் எஸ்டிபிஐ கட்சியினரும் காவல் நிலையத்தில் குவிந்ததோடு, வழக்குப்பதிவு செய்ய போலீசார் காலதாமதம் செய்வதாக குற்றஞ்சாட்டினர். இதனால், நள்ளிரவு வரை பரபரப்பு நிலவியது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment