/indian-express-tamil/media/media_files/OWzGCMx3winoLqzDkA7L.jpg)
மற்றொரு யானையுடன் ஏற்பட்ட மோதலில் மாரடைப்பால் யானை உயிரிழந்திருக்கலாம் என கால்நடை மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
coimbatore: கோவை தடாகம் வனப்பகுதியில் இருந்து மருதமலை வனப்பகுதி வழியாக தினமும் காட்டு யானைகள் இடம் பெயர்ந்து வருகிறது. இந்த நிலையில், மருதமலை அருகே உள்ள அண்ணா பல்கலைகழகம் பின் புறம் உள்ள வனப்பகுதியில் நேற்று ஆண் காட்டு யானை ஒன்று இறந்து கிடப்பதாக கோவை வனச்சரக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். முதல் கட்ட ஆய்வில் உயிரிழந்த ஆண் யானையின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கால்நடை மருத்துவ குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டு உயிரிழந்த யானைக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் உயிரிழந்த யானை மற்றொரு யானையுடன் ஏற்பட்ட மோதலில் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதனால் ஏற்பட்ட மாரடைப்பால் யானை உயிரிழந்திருக்கலாம் என கால்நடை மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.