Advertisment

கவர்னருடன் முதல்வர் முக்கிய ஆலோசனை : இன்று மாலை நடக்கிறது

தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 5 மணியளவில் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cm - governor

தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 5 மணியளவில் சந்திக்க உள்ளார். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என்று தெரிகிறது.

Advertisment

தமிழக பொறுப்பு கவனர் வித்யாசாகர் ராவ், இன்று டெல்லியில் இருக்கிறார். காலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து, தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தார். நேற்றும் அவர் உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இன்று நண்பகல் 12.40 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம், கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை வருகிறார். மாலை 4 மணியளவில் சென்னை வந்தைடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மாலை 5 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கவர்னரை சந்தித்து, தமிழக அரசியல் நிலவரம் குறித்து எடுத்துச் சொல்வார் என்று தெரிகிறது.

கவர்னர் சென்னை வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தகுதி நீக்கம் செய்ய கவர்னரின் நடவடிக்கையே காரணம் என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, எடப்பாடி அரசுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்திருப்பதாகவே கருதப்படுகிறது. எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த தயார் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கவர்னரிடம் தெரிவிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

அதே நேரத்தில், 20ம் தேதி (நாளை) வரையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த, சென்னை ஐகோர்ட் தடைவிதித்து உள்ளது. அதோடு, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அந்த மனுவும் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். எனவே கவர்னர் நீதிமன்ற உத்தரவுக்குக் காத்திருப்பாரா? அல்லது பேரவையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, திமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். இதற்காக மாநிலம் முழுவது உள்ள திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னை வந்துள்ளனர்.

திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை நடக்கிறது. எனவே அடுத்தடுத்த நாட்களின் தமிழக அரசியல் பரபரப்பாகவே இருக்கும்.

முன்பு வந்த செய்தி

M K Stalin Governor C Vidyasagar Rao
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment