/tamil-ie/media/media_files/uploads/2017/06/cm-palanisamy.jpg)
முதல்வர் பழனிசாமி நிவாரண உதவி : காவிரி மற்றும் பவானி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஈரோடு மாவட்டத்தில் ஆற்றங்கரையோர பகுதிகளில் இருந்த சில குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. பவானிசாகர், சத்தியமங்கலம், பவானி, அம்மாபேட்டை, ஈரோடு கருங்கல்பாளையம், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இவ்வாறு 2 ஆயிரத்து 335 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். 1,324 குழந்தைகள் உள்பட 7 ஆயிரத்து 832 பேர் மீட்கப்பட்டு 67 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் வெள்ளம் பாதிப்பு இருக்கும் பகுதிகளுக்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார். ஈரோடு மற்றும் நாமக்கல் பகுதிகளுக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தின் காளிங்கராயன்புரம், பவானி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற முதல்வர் அங்கு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அங்கு நேரில் ஆய்வு செய்தார். பின்னர், பவானி பகுதியில் உள்ள முகாம்களுக்கு சென்ற முதல்வர் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாமக்கல் மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் அவர் உதவி பொருட்களை வழங்கி அவர்களது குறைகளை கேட்டறிய உள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.