Advertisment

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு: ஸ்டாலின் அறிவிப்பு

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
CM MK Stalin announce pongal gift of Rs 1000 to all family card holders in TN Tamil News

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

CM MK Stalin | Pongal Gift: ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகளில் பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் ரொக்கப்பரிசு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. 

Advertisment

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், தைப்பொங்கல் 2024-ம் ஆண்டு குடும்ப அட்டைதத்தாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்க உத்தரவிடப்பட்டது.

2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் வகையில் இரு நூற்று முப்பத்து எட்டு கோடியே தொண்ணூற்று இரண்டு லட்சத்து எழுபத்து இரண்டாயிருத்து எழுநூற்று நாற்பத்து ஒன்று (ரூ.238, 92, 72,741) செலவினம் ஏற்படும் என்று தெரிவித்தது. 

வலியுறுத்தல் 

கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் ரொக்கப் பரிசு குறித்த எந்த அறிவிப்பு இடம் பெறவில்லை. இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பரிசு வழங்க வேண்டும் என அ.தி.மு.க பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிசாமி, பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தமிழக அரசை வலியுறுத்தினர். 

அறிவிப்பு 

இந்நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 5ம் தேதி அறிவித்தார். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 கோடியே 15 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்படும் ரூ. 1000 தொகை பொங்கல் திருநாளை முன்னிட்டு இம்மாதம் 10ம் தேதியே தொகை வரவு வைக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது அறிவிப்பில் தெரிவித்தார். 

கோரிக்கை நிறைவேற்றம் 

இந்நிலையில், அரசு ஊழியர்கள், வருமான வரிசெலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 ரொக்கம் இல்லை என அறிவிக்கப்பட்டது இருந்தது. இந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நிபந்தனை இன்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Cm Mk Stalin Pongal Gift
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment