மஞ்சள் பையுடன் தமிழக அரசு பொங்கல் பரிசு: 20 பொருட்கள் என்னென்ன?

மாநில அரசின் திட்டத்தின் கீழ், 2 கோடி குடும்பங்களுக்கு, 1,088 கோடி ரூபாய் செலவில், பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.

மாநில அரசின் திட்டத்தின் கீழ், 2 கோடி குடும்பங்களுக்கு, 1,088 கோடி ரூபாய் செலவில், பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
M-K-Stalin

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2022-ம் ஆண்டிற்கான 20 பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்தார்.

Advertisment

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 14 முதல் ஜனவரி 17, 2022 வரை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரிசி அட்டைதாரர்கள், குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாநிலத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு விநியோகிக்கப்பட உள்ளது.

டிசம்பர் 20 ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை (GO) படி, பட்டியலில் உள்ள 20 பொருட்கள் அரிசி, வெல்லம், முந்திரி, பாசிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய், மஞ்சள் பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கடுகு, சீரகம், உப்பு, மிளகு, புளி, பருப்பு, ரவை, கோதுமை ஆகியவை மஞ்சள் பையில் வைத்து வழங்கப்படும்.

மாநிலத்தில் நுகர்வோர் மத்தியில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் ‘மஞ்சள் பை’யில் வைத்து பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டம்’ கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜிசிசி) மூலம் 2021 இல் கோயம்பேடு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Advertisment
Advertisements

1,088 கோடி செலவில் 2,15,48,060 குடும்பங்களுக்கு 20 பொருட்கள் விநியோகிக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த தொகுப்புடன் முழு கரும்பும் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜனவரி 3ம் தேதி முதல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

மேலும், இலங்கைத் தமிழர்கள் மற்றும் அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு கரும்புகளுடன் 20 பொருட்களும் பரிசாக வழங்கப்படும். இதற்காக மொத்தம் 2.15 கோடி ரூபாய் செலவிடப்படும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் நெய் கூட்டுறவு சங்கங்களில் இருந்து அரசால் கொள்முதல் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்றுநோயால் மக்களில் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர், மேலும் வருமானத்தில் சரிவைக் கண்டனர். இந்நிலையில் தான் சாமானிய மக்களின் நலன்கருதி, பொங்கல் பரிசுத் திட்டத்தை முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக நிதியுதவி மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: