முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுதேடி ரேசன்: முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்; ஆக. 12-ல் தொடக்கம்

தமிழ்நாட்டில் முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே ரேசன் பொருட்களை விநியோகிக்கும் ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தை ஆகஸ்ட் 12-ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே ரேசன் பொருட்களை விநியோகிக்கும் ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தை ஆகஸ்ட் 12-ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
CM MK Stalin xy

முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்குவதால் அரசுக்கு ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே ரேசன் பொருட்களை விநியோகிக்கும் ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தை ஆகஸ்ட் 12-ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மேலும், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்குவதால் அரசுக்கு ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும்  ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை’ ஆகஸ்ட் 12-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை மக்களின் வீடுதேடிச் சென்றடையச் செய்யும் தமிழ்நாடு அரசின் உயரிய எண்ணத்தின் அடுத்த கட்டமாக, மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ஆகஸ் 12-ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

Advertisment
Advertisements

மக்கள் நலன்சார்ந்த இத்திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும். இத்திட்டத்தின் வாயிலாக 34,809 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்திறனாளிகளும், ஆக மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டைகள் மற்றும் பயனாளர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையிடமிருந்து பெறப்பட்டு, கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர்.

70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்குவதால் அரசுக்கு ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள மக்கள் நலன் சார்ந்த இத்திட்டம், நலிவுற்ற பிரிவினரின் வாழ்வாதாரத்தை சிறப்புறச் செய்வதுடன் அவர்தம் உணவுப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 12-ம் தேதி இத்திட்டத்தை சென்னையில் தொடங்கிவைக்கும் வேளையில், மாவட்டங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cm Mk Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: