/tamil-ie/media/media_files/uploads/2022/01/collage-3.jpg)
தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த வகையில், 2021ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கிவருகிறது.
- பேரறிஞர் அண்ணா விருது - நாஞ்சில் சம்பத்
- மகாகவி பாரதியார் விருது - பாரதி கிருஷ்ணகுமார்
- பாவேந்தர் பாரதிதாசன் விருது - புலவர் செந்தலை கவுதமன்
- சொல்லின் செல்வர் விருது - சூர்யா சேவியர்
- சிங்காரவேலர் விருது - கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம்
- தமிழ்த்தாய் விருது - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு,
- அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது - முனைவர் இரா. சஞ்சீவிராயர்
- சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது - உயிர்மை திங்களிதழுக்கும்
- தேவநேயப்பாவாணர் விருது - முனைவர் கு. அரசேந்திரன்
- உமறுப்புலவர் விருது - நா. மம்மது
- கி.ஆ.பெ. விருது - முனைவர் ம. இராசேந்திரன்,
- கம்பர் விருது - பாரதி பாஸ்கர்
- ஜி.யு.போப் விருது - ஏ.எஸ். பன்னீர்செல்வம்
- மறைமலையடிகள் விருது - சுகி.சிவம்
- இளங்கோவடிகள் விருது - நெல்லைக் கண்ணன்
- அயோத்திதாசப் பண்டிதர் விருது - ஞான. அலாய்சியஸ்
மேலும், இந்தாண்டு முதல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகை ரூ1 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படவுள்ளது. கூடுதலாக, ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரை ஆகியன வழங்கி பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப் பெறுவார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.