ஸ்மார்ட் சிட்டி திட்டம்: ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டதாக கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விசாரணை கமிஷன் அமைத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்திய ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டதாக கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விசாரணை கமிஷன் அமைத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்திய ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
ஸ்மார்ட் சிட்டி திட்டம்: ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

அதிமுக ஆட்சிக் காலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேற்றப்பட்டதில் குளறுபடி ஏற்பட்டதாக தமிழக முதலமைச்சர் மு.க. குற்றம் சாட்டினார். மேலும், மழைக் காலத்துக்குப் பிறகு விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Advertisment

கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டதாக கூறிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விசாரணை கமிஷன் அமைத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்திய ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது: “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்ற பெயரில் மத்திய அரசிடம் இருந்து பல கோடி ரூபாய் பெறப்பட்டது. அவர்கள் அதை என்ன செய்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. இந்த மழை முடிந்த பிறகு விசாரணை கமிஷன் அமைக்கப்படும்.

எஸ்.பி வேலுமணி தலைமையில் உள்ளாட்சி நிர்வாகத் துறையில் எந்தப் பணியும் நடைபெறவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக கமிஷன் பெற்றுள்ளனர் என்பது தெளிவாக உள்ளது. ஆனாலும், நாங்கள் எங்கள் வேலையை நிர்வகித்து முன்னேறி வருகிறோம். ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஒப்பந்தத்தை எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டதற்கு, அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisment
Advertisements

சென்னையின் நிலைமை எப்படி இருந்தது என்ற கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: “மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலும் திமுக சார்பிலும், அரசு சார்பிலும் பணிகள் நடந்து வருகின்றன. உணவு, தங்குமிடம், மருத்துவ முகாம்கள் போன்ற அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய நாங்கள் செயல்படுகிறோம்.” என்று கூறினார்.

மேலும், வெள்ளம் குறைந்துள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெள்ளம் ஓரளவு குறைந்துள்ளது, ஆனால் முழுமையாகக் குறையவில்லை என்றார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Dmk Cm Mk Stalin Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: