/indian-express-tamil/media/media_files/ChRob9RLdKhGdsYmiNo8.jpg)
மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே எங்களின் உடனடி பணி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே எங்களின் உடனடி பணி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 29) தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“தி.மு.க. நடத்திய சமரசமற்ற சட்டப் போராட்டத்தால் கடந்த மூன்று கல்வியாண்டுகளில் ஓ.பி.சி. மாணவர்களுக்கு 15,066 மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன என்பதை பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.
கூடுதலாக, சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பு, இந்த குறிப்பிடத்தக்க சாதனையின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் இந்தியா முழுவதும் ஓ.பி.சி. இட ஒதுக்கீடு குறித்த பல ஆக்கபூர்வமான விவாதங்களை வளர்த்துள்ளது.
எங்கள் நிகழ்ச்சி நிரலில் பல விஷயங்கள் இருந்தாலும், பின்தங்கிய சமூகங்களின் விகிதாச்சாரத்தை அடையாளம் காணவும், சமூக நீதியை நிலைநாட்ட நமது உரிமையான பங்கைப் பெறவும் மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே எங்களின் உடனடி பணியாகும்.
இதை அடைய நாம் ஒன்றிணைவோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாட்டில் மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். மேலும், மாநில அரசுக்கே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றமே தீர்ப்பு அளித்துள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார் என்பது குறிபிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.