/indian-express-tamil/media/media_files/2025/09/01/stalin-jermany-2025-09-01-18-04-27.jpg)
ரூ.3,201 கோடி முதலீடுகள் ஈர்ப்பு: ஜெர்மனியில் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
தமிழ்நாட்டுக்கான புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறைப் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசுக்கும் 3 நிறுவனங்களுக்கும் இடையே ரூ.3,201 கோடி மதிப்புள்ள முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டில் 6,250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கையெழுத்தான ஒப்பந்தங்கள்:
Nordex குழுமம்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதன் காற்றாலை உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்ய ரூ.1,000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.
Knorr Bremse நிறுவனம்: காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் ரயில்வே உதிரிபாகங்கள் உற்பத்தி ஆலைகளை அமைக்க ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது. இதனால் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ebm-papst நிறுவனம்: சென்னையில் உள்ள தனது குளோபல் ஸ்கில் சென்டரை விரிவாக்கம் செய்யரூ.201 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் 250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த நிகழ்வுகளின்போது, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில் துறை செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.