Advertisment

முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்த அவதூறு வழக்கு: மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு

மார்ச் 21ம் தேதி ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்த அவதூறு வழக்கு: மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த அவதூறு வழக்கில் மார்ச் 21 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி, தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 13 ஆம் தேதி சென்னை, தேனாம்பேட்டையில் திமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் ஸ்டாலின், தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வெளியிட்ட வீடியோவை மையமாக வைத்து முதல்வர் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்திருந்தார். இந்த பேட்டி அடுத்த நாள் முரசொலியிலும் வெளியானது.

இந்நிலையில் தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்துவதாகக் கூறி, ஸ்டாலினுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், வரும் மார்ச் 21ம் தேதி ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Mk Stalin Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment