வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன.27) இரவு ஸ்பெயின் நாட்டிற்கு செல்கிறார். ஸ்பெயினுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல்வர் பல்வேறு நாட்டு தொழிலதிபர்கள், அரசு பிரநிதிகளை சந்திக்கிறார். 10 நாட்கள் சுற்றுப் பயணமாக ஸ்பெயின் செல்லும் ஸ்டாலின் பிப்.7-ல் மீண்டும் சென்னை திரும்புகிறார்.
தமிழ்நாட்டில் சென்னையில் கடந்த ஜனவரி 7, 8-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த
மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. வெளிநாட்டில் உள்ள முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கவும், அதன் மூலம் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்ககவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முன்னனெடுப்புகளை எடுத்து வருகிறார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றதன் தொடர்ச்சியாக மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில்
இன்று முதல் 10 நாட்கள் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சுற்றுப் பயணம் செய்கிறார். இதற்காக இன்று இரவு 9.45 மணிக்கு விமானம் மூலம் துபாய் புறப்படுகிறார். பின்னர், அங்கிருந்து சுவீடனுக்கு செல்கிறார். அதன்பிறகு ஸ்பெயினுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
அங்கு பல்வேறு நாட்டு தொழிலதிபர்கள், வெளிநாட்டு அரசு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரை சந்தித்துப் பேசுகிறார். இந்த 10 நாள் பயணத்தில் ஸ்டாலின் பல்வேறு நாடுகளுக்கு செல்கிறார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு பிப்ரவரி 7-ல் மீண்டும் சென்னை திரும்புகிறார். ஸ்டாலினின் இந்த பயணத்தால் தமிழ்நாட்டிற்கு மேலும் வெளிநாட்டு முதலீடுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“