தூத்துகுடியில் நடைபயிற்சி மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கும் நிலையில் கனிமொழி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி தி.மு.க வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து காய்கறி சந்தை பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் வாக்கு சேகரித்தார்.
காய்கறி மார்க்கெட்டை விரிவுபடுத்த முதல்வரிடம் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். மேலும் முதலமைச்சரிடம் பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்துகொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“