பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குஜராத் மாநிலம், அகமதாபாதில் உள்ள யு.என். மேத்தா இதய நோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார்.
இந்நிலையில் இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவு செய்துள்ளார். “தாயாரை இழந்த துயரத்தை யாராலும் தாங்க முடியாது; உங்களது இழப்புக்கு நான் எவ்வளவு வருந்துகிறேன் என சொல்ல வார்த்தைகள் இல்லை; எனது ஆழ்ந்த இரங்கலையும் இதயப்பூர்வமான இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.