”பிரியா நினைத்ததை நீ சாதிக்க வேண்டும்’: நேரில் சென்று ஸ்டாலின் ஆறுதல்
மூட்டு அறுவை சிகிச்சை செய்த சென்னையை சேர்ந்த கால்பந்து வீராங்கனை தவறான சிகிச்சையால் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவரது குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மூட்டு அறுவை சிகிச்சை செய்த சென்னையை சேர்ந்த கால்பந்து வீராங்கனை தவறான சிகிச்சையால் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவரது குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
Advertisment
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிரியா என்ற கால்பந்து வீராங்கனைக்கு காலில் லிகமண்ட் டியர் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்யபட்ட பிறகு நீக்கப்பட வேண்டிய கட்டு சரியான நேரத்தில் நீக்கவில்லை என்பதால், அவர் கால் அழுகும் நிலை ஏற்பட்டது. மேலும் காலை அகற்றினர். தொடர்ந்து அவருக்கு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் பிரியாவின் குடும்பத்தை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். ”பிரியா நினைத்ததை நீ சாதிக்க வேண்டும்” என்று பிரியாவின் சகோதரரிடம் அவர் கூறினார். இந்நிலையில் ரூ. 10 லட்சம் நிவாரணம், அரசு சார்பில் வீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் ஆணைகளை அவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.