Advertisment

ஆன்லைனில் கட்டுமான அனுமதி: சென்னையில் பில்டர்கள் ஹேப்பி

கட்டுமான பணிகள் தொடர்பான திட்டங்களுக்கு ஆன்லைன் மூலம் ஒப்புதல் வழங்க, சி.எம்.டி.ஏ முடிவு செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு

ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு

கட்டுமான பணிகள் தொடர்பான திட்டங்களுக்கு  ஆன்லைன் மூலம் ஒப்புதல் வழங்க, சி.எம்.டி.ஏ முடிவு செய்துள்ளது.

Advertisment

சென்னையில் வீடு கட்டுவது மற்றும் அதற்கான கட்டுமானம் தொடர்பான திட்டங்களை இனி ஆன்லைன் மூலம் ஒப்புதல் வழங்க சி.எம்.டி.ஏ முடிவு செய்துள்ளது. கட்டுமானம் தொடர்பான எல்லா விஷயங்களிலும் முழுவதுமாக டிஜிட்டல் முறையில் மாற்ற சி.எம்.டி.ஏ முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் டிஜிட்டல் மயமாவது, பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் என்று கட்டுமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர். சி.எம்.டி.ஏ அதிகாரிகள் கூறுகையில், “கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை 650 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில்  330 கட்டுமான திட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதில்  63 திட்டங்களுக்கு 60 நாட்களில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது” என்று கூறினர்.

மேலும் அவர்கள் கூறுகையில் “ சில திட்டங்களுக்கான அனுமதி 20 நாட்களிலேயெ வழங்கப்பட்டது. வீட்டுமனை கட்டுவதற்கான விண்ணப்பங்கள்தான் அதிகபடியாக வந்துள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 130 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. “ என்று அவர்கள் கூறியுள்ளனர்.

”மக்கள் விரும்புவது போல, வீடுகளை விரைவில் பெற உதவும். மேலும் கட்டுமான நிறுவனங்கள் அதிக பணத்தை செலவு செய்ய தேவையில்லை” என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

“ ஆன்லைன் மூலம் ஒப்புதல் வழங்குவதால், எந்த ஆவணங்களையும் கிடப்பில் போட முடியாது. வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்” என்றும் சி.எம்.டி.ஏ அதிகாரி தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment