சென்னை அண்ணா சாலை... முக்கியமான இந்த 2 இடங்களில் நடை மேம்பாலம்: எஸ்கலேட்டர் வசதியும் உண்டு

இந்த திட்டங்களுக்கு தலா 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு சட்டசபையில் அறிவித்தார்.

இந்த திட்டங்களுக்கு தலா 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு சட்டசபையில் அறிவித்தார்.

author-image
WebDesk
New Update
over bridge

சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சி.எம்.டி.ஏ.,) பாதசாரிகள் சாலைகளைக் கடப்பதற்கும், உயிரிழப்பைக் குறைப்பதற்கும் நகரின் இரண்டு மேம்பாலங்களைக் கட்ட திட்டமிட்டுள்ளனர்.

Advertisment

இரண்டு மேம்பாலங்களில் முதலாவது அண்ணாசாலை அணைக்கட்டு சாலையில் இருந்து ஜி.பி., சாலை வரையுள்ள சந்திப்பிலும், மற்றொன்று அண்ணாநகர் கேந்திரிய வித்யாலயா அருகே 100 அடி சாலையிலும் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டங்களுக்கு தலா 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சி.எம்.டி.ஏ., அமைச்சர் பிகே சேகர் பாபு சமீபத்தில் சட்டசபையில் அறிவித்தார்.

மக்கள் இதுபோன்ற மேம்பாலங்களைப் பயன்படுத்துவதற்கு வசதியாக, அவர்களுக்கு எஸ்கலேட்டர்கள் மற்றும் லிப்ட்கள் பொருத்தப்படும். இது மூத்த குடிமக்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக பொருத்தப்படுகிறது.

Advertisment
Advertisements

போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் முறையான போக்குவரத்து அமலாக்க நடவடிக்கைகள் காரணமாக அண்ணாசாலை- ஜி.பி., சாலை சந்திப்பில் சாலையை கடக்க பலர் சிரமப்படுவதால் பாதசாரிகளுக்கு இந்த அறிவிப்பு நிம்மதியை அளித்துள்ளது.

பாதசாரிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் வகையில் பாதைகள் வடிவமைக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்ட மற்றும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Chennai Metro

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: