New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/27/u4nCKP5JSYCiop3Fs71H.jpg)
சென்னை போலீசாரால் மும்பையில் கைது செய்யப்பட்ட நைஜீரியாவைச் சேர்ந்த எகோ நதானி சிபுசோர்
சென்னை போலீசாரால் மும்பையில் கைது செய்யப்பட்ட நைஜீரியாவைச் சேர்ந்த எகோ நதானி சிபுசோர்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த மேலாளர் மற்றும் டிஸ்க் ஜாக்கி உட்பட மூன்று பேரை சென்னை காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் (ஏஎன்யு) கைது செய்தனர்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள தி தீஃப் பாரின் மேலாளர் எம்.அருண்ராஜ் (29) உட்பட கைதானவர்கள் அனைவரும் மதுபான விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கொகைன் போதைப்பொருளை விநியோகித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர் முன்னதாக கொக்கைன் வைத்திருந்ததாகவும். நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக இருந்ததாகவும் வி.புருஷோத்தமன் (32) மற்றும் ராம்குமார் ராஜு (37) ஆகியோரை அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.
குற்றவாளிகளை போலீசார் காவலில் எடுத்த பின்னர் அதில் நைஜீரியர் இருப்பதும் தெரிய வந்தது. அதிகாரிகளிடம் நடத்திய விசாரணையில் நைஜீரிய தொடர்பாளர் ஒருவரிடம் இருந்து சென்னைக்கு கொக்கைன் போதைப்பொருளை வாங்கியது தெரியவந்தது.
மும்பையில் தலைமறைவாக இருந்த் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த எகோ நதானியல் சிபுசோரை போலீஸ் குழு கண்டுபிடித்தது. அங்கிருந்து சென்னை அழைத்து வர போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அவரிடம் இருந்து 5 கிராம் கொக்கைன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்ததும், அவர் காவலில் வைக்கப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
எகோ நதானியல் சிபுசோரிடமிருந்து 60 கிராம் கொக்கைன் 17 கிலோ கஞ்சா 2 கிராம் கஞ்சா 4 கிராம் கஞ்சா 16 செல்போன்கள், 3 இரு சக்கர வாகனங்கள் 3 கார்கள், 2 எடை இயநதிரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
"ஏ.என்.ஐ.யு குழு நகரத்தில் உள்ள பார்கள் பப்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடக்கிறதா என்பதை கண்காணித்து வருகிறது" என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது
ஜனவரி 25 ஆம் தேதி முதல் கைது செய்யப்பட்டதிலிருந்து இதுவரை 18 பேர் ஏ என்.ஐ.யு குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். நகரத்தில் உள்ள பார்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களின் நிர்வாகங்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளதாக தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.