பொள்ளாச்சி அடுத்த துறையூர் தனியார் தோட்டத்தில் மயிலை விழுங்கிய 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.
பொள்ளாச்சி அடுத்த துறையூர் அருகே தனியார் தோட்டத்தில் மயில் ஒன்று இறக்கைகளை அடித்தபடி சத்தமிட்டு கொண்டிருந்தது. அங்கு வேலை பார்க்கும் கோபால் என்பவர் அருகில் சென்று பார்த்த போது சுமார் 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று மயிலை விழுங்கிக் கொண்டு இருந்தது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தனியார் அமைப்பைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு 12 அடி நீளம் மலைப்பாம்பை பத்திரமாக மீட்டார். மீட்கப்பட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“