/indian-express-tamil/media/media_files/BhhlG0sunRFMhu8Ojnlp.jpg)
Coimbatore
கோவை மாவட்டத்தில் சாலையில் டூவிலரில் சென்ற முதியவர் மீது தனியார் பேருந்து மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் டூ கோவை சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மேட்டுப்பாளையம்- கோவை சாலையை கடந்து செல்ல முயன்ற போது மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு சென்ற தனியார் பேருந்து அவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசபட்ட ஜெயச்சந்திரன் பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய நிலையில், சுதாரித்த பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தினை நிறுத்தியதால் அவர் நூலிழையில் உயிர்தப்பினார்.
கோவையில் டூவிலரில் சென்ற முதியவர் மீது மோதிய தனியார் பேருந்து -நூலிழையில் உயிர் தப்பும் சிசிடிவி காட்சி#Coimbatorepic.twitter.com/8ewyEwLz3M
— Indian Express Tamil (@IeTamil) December 13, 2023
தொடர்ந்து காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதும் பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.