Advertisment

சுட்டெரித்த சூரியன்: ஆழியாரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், பொள்ளாச்சி அடுத்த ஆழியார் கவியருவியில் சுற்றுலா பயணிகள் நூற்றுக்கணக்கில் குவிந்தனர். அணை பூங்கா, கவி அருவி உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

author-image
WebDesk
New Update
Azhiyaru area was thronged with tourists

சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஆழியார், ஆழியார் அணை பூங்கா, கவி அருவி உள்ளிட்ட இடங்களுக்கு படையெடுத்துள்ளனர்.

Coimbatore Aaliyar Falls : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் இயற்கை எழில் சார்ந்த மனதை கொள்ளை கொள்ளும் ரம்மியமாக காட்சியளிக்கும் பகுதி ஆகும்.

Advertisment

இங்கு விடுமுறை நாள்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவதும் வழக்கம். இந்நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆழியார் கவியருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஆழியார், ஆழியார் அணை பூங்கா, கவி அருவி உள்ளிட்ட இடங்களுக்கு படையெடுத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு மழை பெய்ததன் காரணமாக இன்று கவி அருவியில் சற்று கூடுதலாகவே தண்ணீர் வரத்து உள்ளது. 

இதனால் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆனந்தத்தமாக கவி அருவியில்  குடும்பத்துடன் குளித்து மகிழ்கின்றனர்.கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் போலீசார் மற்றும் வனத்துறையினர் தற்பொழுது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment