கூட்டி கழிச்சு பாரு... கணக்கு சரியா வரும்... அ.தி.மு.க-வினர் ஒட்டிய போஸ்டர்கள் கிழிப்பு: கோவையில் பரபரப்பு

கூட்டி கழிச்சு பாரு... கணக்கு சரியா வரும் என்ற ரஜினி பட வசனத்துடன் அ.தி.மு.க வினர்  ஒட்டிய போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு இருப்பது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டி கழிச்சு பாரு... கணக்கு சரியா வரும் என்ற ரஜினி பட வசனத்துடன் அ.தி.மு.க வினர்  ஒட்டிய போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு இருப்பது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
coimbatore AIADMK poster tore up Tamil News

கூட்டி கழிச்சு பாரு... கணக்கு சரியா வரும் என்ற ரஜினி பட வசனத்துடன் அ.தி.மு.க வினர்  ஒட்டிய போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு இருப்பது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி வேலுமணி, அம்மன் அர்ஜுனன், ஜெயராமன் ஆகியோர் படங்கள் இடம் பெற்றுள்ள போஸ்டர்கள் கோவை முழுதும் ஒட்டப்பட்டுள்ளது. அந்தப் போஸ்டரில், '2026 இல் அண்ணன எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி, கூட்டி கழிச்சு பாரு கணக்கு சரியா வரும்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. 

Advertisment

இந்நிலையில், இந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு இருப்பது அ.தி.மு.க வினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  அ.தி.மு.க வினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த போஸ்டரகள் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டு உள்ளதாக அ.தி.மு.க-வினர் கூறியிருந்தார்கள். இத்தகைய சூழலில், அ.தி.மு.க வினர் ஒட்டிய போஸ்டர்களை சிலர் பல இடங்களில் கிழித்து உள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: