Advertisment

கோவை; ஆழியார் கவியருவி செல்லத் தடை

கோவையில் உள்ள ஆழியார் கவியருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அங்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மலை பகுதியின் அடிவாரத்தில் பொள்ளாச்சி வால்பாறை மலை பாதையில் இந்த அருவி உள்ளது.

author-image
WebDesk
New Update
Pollachi Aliyar  Kavi Aruvi Falls banned for Tourist

கோவை ஆழியார் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் மழை காரணமாக ஆழியார் கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மலை பகுதியின் அடிவாரத்தில் பொள்ளாச்சி வால்பாறை மலை பாதையில் அமைந்துள்ளது ஆழியார் கவியருவி. 

Advertisment

சுற்றுலா தளமான கவி அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் நேற்று இரவு முழுவதும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கன மழை பெய்து வருகிறது. 

இதனால் ஆழியார் கவி அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கவியருவி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அருவியில் தண்ணீர் வரத்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் பி ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment