கோவை அன்னபூரணி அம்மன் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: நீதிமன்ற உத்தரவால் ரூ.55 கோடி மதிப்பு நிலம் மீட்பு

கோவையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு சொந்தமான அன்னபூரணி அம்மன் கோவில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து 55 கோடி ரூபாய் மதிப்புடைய நிலம் மீட்கப்பட்டது.

கோவையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு சொந்தமான அன்னபூரணி அம்மன் கோவில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து 55 கோடி ரூபாய் மதிப்புடைய நிலம் மீட்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
enchrochment covai

காவல் துறை உதவியுடன் ஜே.சி.பி எந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

கோவையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு சொந்தமான அன்னபூரணி அம்மன் கோவில் நிலம்  ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து 55 கோடி ரூபாய் மதிப்புடைய நிலம் மீட்கப்பட்டது. காவல் துறை உதவியுடன் ஜே.சி.பி எந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

Advertisment

தென் கைலாயம் என்று பக்தர்களால் போற்றப்படும் பழமை வாய்ந்த கோவை, பூண்டி அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு சொந்தமாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் உப கோவில்கள் உள்ளன.

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலின் உபகோவிலான மாதம்பட்டி கிராமத்தில் அருள்மிகு அன்னபூரணி அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமாக மாதம்பட்டி கிராமத்தில் 11 ஏக்கர் நிலம் உள்ளது. அதனை பல்வேறு நபர்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசித்து வந்தனர். 

இதைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகத்தினர் கோவை குற்றவியல் இரண்டாவது நீதிமன்றத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்க தீர்ப்பு வழங்கி நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

Advertisment
Advertisements

இதையடுத்து, புதன்கிழமை (30.07.2025) ஆக்கிரமிக்கப்பட்ட  ரூபாய் 55 கோடி மதிப்புடைய 11 ஏக்கர் நிலத்தை ஜே.சி.பி எந்திரத்தைக் கொண்டு காவல் துறையினர்  உதவியுடன் அதிகாரிகள் மீட்டு நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: