/indian-express-tamil/media/media_files/2025/09/15/automobile-workshop-meeting-protest-2025-09-15-19-25-08.jpg)
ஆட்டோமொபைல் சங்கத்தில் மோதல்: தேர்தல் கோரி உறுப்பினர்கள் போராட்டம்-முற்றுகை
கோவையில் நடந்த ஆட்டோமொபைல் ஒர்க் ஷாப் உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை பாலக்காடு சாலையில் உள்ள தனியார் விடுதியில் ஆட்டோமொபைல் ஒர்க் ஷாப் உரிமையாளர் சங்கத்தின் 42-வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே, உறுப்பினர்கள் பொதுக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முறையாக தேர்தல் நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனால், உறுப்பினர்களை அரங்கத்திற்குள் அனுமதிக்காமல், புதிதாக சேர்க்கப்பட்ட மற்றும் உறுப்பினர் அல்லாதவர்களை வைத்து கூட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த உறுப்பினர்கள் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வாளரிடம் முறையிட்டனர். வழக்கை விசாரித்த காவல் ஆய்வாளர், சிவில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் எப்படி கூட்டம் நடத்தலாம் என்று கேள்வி எழுப்பி, கூட்டம் நடத்தியவர்களையும் எதிர்த்தவர்களையும் நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தி சமரசம் செய்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.