'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றி கொண்டாட்டம்: கோவையில் பா.ஜ.க பேரணி - வானதி சீனிவாசன் பங்கேற்பு!

'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றி கொண்டாட்ட பேரணி கோவையில் விமரிசையாக நடத்தப்பட்டது. இதில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கலந்து கொண்டார்.

'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றி கொண்டாட்ட பேரணி கோவையில் விமரிசையாக நடத்தப்பட்டது. இதில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கலந்து கொண்டார்.

author-image
WebDesk
New Update
Cbe bjp rally

இந்திய ராணுவம் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் வெற்றியை கொண்டாடும் விதமாக, கோவையில் பா.ஜ.க சார்பில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது. இதில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, அ.தி.மு.க சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராமன், பா.ஜ.க மாவட்ட தலைவர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள், எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisment

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை வெற்றிகரமாக அமைந்தது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாகவும், பிரதமர் மோடி மற்றும் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பா.ஜ.க-வினர் பேரணி நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கோவையில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது.

கணபதி பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி, சங்கனூர் சாலை வழியாக கண்ணப்பன் நகர் வரை ஊர்வலமாகச் சென்றது. பேரணியின் முன்பு, பிரமோஸ் ஏவுகணை மாதிரி நான்கு சக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்டது.

இந்த பேரணியில் பாரத மாதா, நேதாஜி, அப்துல் கலாம், விவேகானந்தர், பாரதியார் வேடமணிந்த தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: