/indian-express-tamil/media/media_files/Tvs47MWjr2V2FTq2fqx5.jpg)
Coimbatore bomb blast case prisoner death
கோவை உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்தவர் என்.எஸ்.அக்கீம் (46). இவர் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 40வது குற்றவாளியாக கைது செய்யப்பட்டார்.
பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்தசில வருடங்களுக்கு முன்பு இவருக்கு மூளையில் புற்றுநோய் தொற்று ஏற்பட்டது.
இதற்காக அக்கீமுக்கு சென்னை ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கு தொடர்ந்து பாதிப்பு இருந்து வந்தது, இதனையடுத்து அக்கீமை டாக்டர்கள் கோவைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 3 மாதங்களாக அக்கீம் பரோலில் இருந்தபடி வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று (செப்.14) பரிதாபமாக இறந்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.