கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு காரில் இருந்த சிலிண்டர் வெடித்து தீ விபத்து நடந்த இடத்தில் மூடப்பட்டிருந்த கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது.
கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு இன்று (அக்டோபர் 23) அதிகாலை டவுன்ஹால் பகுதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் இருந்த காரில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒரு நபர் உடல் கருகி உயிரிழந்தார்.
இதனையடுத்து காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அதனைத் தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையர், ஏடிஜிபி, தமிழக டிஜிபி என காவல்துறை உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை தடய அறிவியல் துறையினரும் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காரில் எரிந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆணிகள் கோலிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதே சமயம் அண்டை மாவட்ட போலிசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காலையில் இருந்து அப்பகுதியில் மூடப்பட்டிருந்த துணி கடைகளில் சில கடைகள் திறப்பட்டு விற்பனை துவக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக கூடுதல் போலிசார் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"