/tamil-ie/media/media_files/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-24-at-9.18.54-AM.jpeg)
Intercom facility for Prisoners to talk to their relatives
தமிழகத்திலேயே கோவையில் முதல் முறையாக சிறை கைதிகள் உறவினர்களிடம் பேச இன்டர்காம் வசதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என்று மொத்தம் 2026 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர்.
விசாரணை கைதிகளின் உறவினர்கள் வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் கைதிகளை சந்தித்து பேச அனுமதிக்கப்படுகிறது. அதேபோல் குண்டத் தடுப்பு சட்ட கைதிகள், தண்டனை கைதிகள் செவ்வாய் வியாழக்கிழமை உறவினர்களை பார்த்து பேச அனுமதிக்கப்படுகிறது.
இதற்காக சிறை அதிகாரிகளுக்கு மனு அளித்து அனுமதி பெற வேண்டும். பிறகுதான் இவர்கள் பேச முடியும்.
கைதிகளும், உறவினர்களும் சிறை வளாகத்தில் கம்பிகளுக்கு இடையில் இரண்டு மீட்டர் தூரத்தில் நின்று பேசுவார்கள்.
வழக்கறிஞர்களும் இதே போன்று தான் கைதிகளிடம் பேசும் நிலை இருந்தது. மேலும் வயதான கைதிகள் உறவினர்கள் பேசுவதை சரியாக புரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது.
அதேபோல், வயதான உறவினர்கள் இளம் கைதிகளிடம் பேசும் போதும் புரிந்து கொள்ள முடியாததால் சத்தம் போட்டு பேச வேண்டி இருக்கிறது.
இந்நிலையில், கோவை சிறைத் துறை டி.ஐ.ஜி சண்முகசுந்தரம் உத்தரவுபடி சிறை சூப்பிரண்டு ஊர்மிளா, ஜெயிலர் சிவராஜ் ஆகியோர் மேற்பார்வையில் இதற்கு மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, இரு பக்கத்திலும் இன்டர்காம் வைத்து கைதிகளும் உறவினர்களும் எளிதில் பேச தற்போது வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தமிழகத்திலேயே முதல் முறையாக கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, மொத்தம் 8 இன்டர்காம் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.