கோவாவில் யோகா போட்டிகள்: கோவை குழந்தைகள் சாதனை

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற மழலைகளுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற மழலைகளுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
Yoga Competitions achievers

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குழந்தைகள்.

அண்மையில் கோவாவில் கோவா மற்றும் சர்வதேச யூத் யோகா பெடரேஷன் சார்பாக இரண்டாவது  தேசிய அளவிலான யோகா போட்டிகள் நடைபெற்றன.
இந்த போட்டியில் தமிழகம், பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடாகா மற்றும் கோவா என  பல்வேறு மாநிலங்களை   சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள், சிறு குழந்தைகள் கலந்துகொண்டனர். 

Advertisment

பொது பிரிவு, சிறப்பு பிரிவு மற்றும் ஆர்டிஸ்டிக் ரிதமிக் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வயது அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றன.
இதில் தமிழகம் சார்பாக கலந்து கொண்ட கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் பகுதியில் உள்ள பர்ப்பிள் டாட்ஸ்  பள்ளியை சேர்ந்த மழலைகள் ஒட்டு மொத்தமாக அதிக புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

இந்நிலையில் கோவை விமான நிலையம் திரும்பிய தலைமை பயிற்சியாளர் அகிலாண்டேஸ்வரி மற்றும் குழந்தைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் பொதுமக்கள் முன்னலையில் மழலை குழந்தைகள்  அனைவரும் வியக்கும் விதமாக பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர்

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் கனகதாரா, தாளாளார் கவுதம், பயிற்சியாளர் யோகிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisment
Advertisements

செய்தியாளர் பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: