உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
கோவையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, சமத்துவம், சகோதரத்துவம் நல்லிணக்கத்துடன் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது.
ரத்தினபுரியில் உள்ள செயின்ட் பால் சர்ச் வளாகத்தில், பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில தலைவர் ஹாஜி. ஜெ. முகமது ரஃபி சார்பாக இந்த விழா ஏற்பாடு செய்திருந்தனர்.
மடாதிபதிகள், ஃபாதர்கள், முஸ்லீம் மத போதர்கள் ஒன்றாக இணைந்து தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்காக வந்தவர்களை பூங்கொத்து தந்து, இனிப்புகள் ஊட்டி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.
மதங்கள் வேறாயினும், மனம் ஒன்று என்பதனை வெளிப்படுத்தி இந்த சமத்துவ கிறிஸ்துமஸ் விழா, நாடெங்கும் மக்களால் கொண்டாட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்துக்கள் , இஸ்லாமியர்கள் , கிறிஸ்துவர்கள் ஒன்றிணைந்து சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவினை கொண்டாடியது பலரை பாராட்ட செய்தது.
சமத்துவ கிறிஸ்துமஸ் பண்டிகையை பத்து வருடங்களுக்கு மேலாக கொண்டாடுவதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர் .
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“