Advertisment

6,248 சைபர் கிரைம் வழக்கு; 2,300 சிசிடிவி கேமரா பொருத்தம்: கோவை போலீஸ் தடுப்பு நடவடிக்கை பற்றி பட்டியலிட்ட கமிஷனர்

இந்த ஆண்டு மாநகர காவல் துறையின் கீழ் எடுக்கப்பட்ட முன்னெடுப்புகள், தடுப்பு நடவடிக்கைகளை கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பட்டியலிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Coimbatore city police commissioner V Balakrishnan latest press meet Tamil News

சாலை விபத்துகளை பொறுத்த வரை கடந்த ஆண்டு 263 விபத்துக்கள் நடந்துள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Advertisment

coimbatore: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாநகரில் இந்த வருடம் கோவை மாநகரில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஆகியவற்றை காவல்துறை எவ்வாறு கையாண்டது என்பது பற்றிய ஆய்வு இன்று நடத்தப்பட்டதாக தெரிவித்தார். 

கடந்த 2022ம் வருடத்தை ஒப்பிடுகையில் இந்த வருடம் ஆதாய கொலை வழக்கு எதுவும் இல்லை எனவும் கூட்டுக் கொள்ளை கடந்த வருடத்தில் 11 வழக்குகள் இருந்த நிலையில் இந்த வருடம் மூன்று வழக்குகள் மட்டும் பதிவாகி மூன்று சம்பவத்திலும் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார். 

வழிப்பறியைப் பொறுத்தவரை, கடந்த வருடம் 187 வழக்குகள் பதிவான நிலையில் இந்த வருடம் 58 சதவிகிதம் குறைந்து 78 வழக்குகள் மட்டும் பதிவாகி இருப்பதாகவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து நுண்ணறிவு பிரிவின் முன்னறிவிப்பை முறையாக ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கைகள் எடுத்ததன் பயனாக பெரிய அளவு எந்த ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் இல்லை. 

சட்டம் ஒழுங்கு தொடர்பான வழக்குகளை பொருத்தவரை கொலை வழக்குகளில் 22 வழக்குகளே பதிவாகி இருப்பதாகவும் கொலை முயற்சி வழக்குகளை பொருத்தவரை கடந்த ஆண்டு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 45 சதவீதம் குறைந்து 35 வழக்குகள் மட்டும் பதிவாகி இருப்பதாகவும், கழகம் செய்யும் வழக்குகளை பொருத்தவரை 13 வழக்குகள் மட்டும் இந்த ஆண்டு பதிவாகி இருப்பதாகவும் காயம் ஏற்படுத்தும் வழக்குகள் கடந்த ஆண்டு 517 வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில் இந்த வருடம் 37 சதவிகிதம் குறைந்து 324 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.

குற்ற வழக்குகளையும் சட்டம் ஒழுங்கு வழக்குகளையும் பார்க்கும்போது  கடந்த வருடத்தை விட இந்த வருடம் தடுப்பு நடவடிக்கைகள் மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டிருப்பது தெரிய வருவதாகவும் குறிப்பாக கண்காணிப்பு கேமராக்கள், அதை நவீன தொழில்நுட்ப கண்காணிப்பு கேமராக்கள், நம் கோவை நம் பாதுகாப்பு என்ற டேக் லைன் மூலம் தெருக்களில் உள்ள வணிக நிறுவன மக்களை அணுகி சிசிடிவி கேமராக்களை பொருத்தி வருவதாக தெரிவித்தார். மேலும் Hot Spot என்ற சட் ஒழுங்கு பிரச்சனைகள் பதிவான இடங்களை ஆய்வு செய்து அந்த இடங்களில் ரோந்து பணிகளை அதிகப்படுத்தியதன் மூலம் குற்ற வழக்குகள் குறைந்துள்ளதாக தெரிவித்தார். 

மேலும் 1200 பிடியாணைகளை நிறைவேற்றி இருப்பதாகவும், குண்டர் தடுப்பு சட்டத்தை பொருத்தவரை 89 வழக்குகள் இந்த ஆண்டு போடப்பட்டுள்ளதாக கூறிய அவர் குண்டர் சட்டங்களை போடும் எண்ணம் இல்லை எனவும் ஆனால் பொருள் தொடர்பான வழக்குகளில் கடந்த வருடம் 16 நபர்கள் இருந்த நிலையில் இந்த ஆண்டு 25 பேர்களாக அதிகரித்துள்ளதன் காரணமாக சட்டங்களை போடுவதாகவும் தெரிவித்தார். 

சாலை விபத்துகளை பொறுத்த வரை கடந்த ஆண்டு 263 விபத்துக்கள் நடந்ததாகவும் இந்த ஆண்டு 255 விபத்துக்கள் நடந்துள்ளதாக தெரிவித்தார். சாலை விபத்துகளில் இறந்தவர்களை பொருத்தவரை கடந்த ஆண்டு 272 பேர் உயிரிழந்த நிலையில் இந்த ஆண்டு 261 ஒரு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் சாலை விபத்துகளை மீறுபவர்கள் மீது பதியப்படும் வழக்குகள் இந்த ஆண்டு குறைந்துள்ளதாகவும் கூறிய அவர் ஆனால் அபராதம் விதிப்பை பொருத்தவரை கடந்த ஆண்டு 9 கோடி இருந்த நிலையில் இந்த ஆண்டு 10 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

கஞ்சா குட்கா போன்ற வழக்குகளை பொருத்தவரை பல்வேறு இணைந்து செயல்பட்டதன் அடிப்படையில் 63 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் லாட்டரி வழக்குகளும் இந்த ஆண்டு பதியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

சைபர் கிரைம் வழக்குகளை பொருத்தவரை இந்த ஆண்டு மட்டும் 6248 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 4276 வழக்குகள் பணம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளடக்கியது எனவும் 1972 வழக்குகள் இதர சைபர் கிரைம் வழக்குகளாக பதியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இதில் 201 FIR போடப்பட்டு 46 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் 28 கோடி பணத்தை குற்றவாளிகள் கையில் சென்று சேராமல் தடுத்துள்ளதாகவும் அதில் இரண்டு கோடி ரூபாய் பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். 

இவை மட்டுமின்றி கோவை மாநகரில் U Turn, Remote Signal, Speed Radar Gun, காவலர்களுக்கான ஊக்குவிப்பு பயிற்சிகள், காவல் வனம் போன்ற பல்வேறு செயல்முறைகளை செயல்படுத்தி வருவதாகவும் Speed Radar Gun மூலம் 476 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஏற்கனவே 14 Boys and Girls Club இருந்த நிலையில் இந்த வருடம் மட்டும் புதிதாக 9 Club திறந்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும் கோவை மாநகரில் இந்த ஆண்டு 2300 சிசிடிவி கேமராக்கள் புதிதாக போடப்பட்டிருப்பதாகவும் இவை அனைத்தும் சாலைகளை நோக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர்  குற்றங்களை தடுப்பதற்கும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றார். போலிஸ் அக்கா என்ற திட்டத்தின் கீழ் முன்னுருக்கும் மேற்பட்ட அழைப்புகளை ஏற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் போலிஸ் Bro என்ற திட்டமும் கோவை மாநகரில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் 326 மாணவர்களை ஆபரேஷன் ரீபூட் திட்டத்தின் கீழ் பள்ளி படிப்புகளை மீண்டும் தொடர செய்துள்ளதாக தெரிவித்தார். 

இவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கையில் இந்த ஆண்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றங்கள் குறைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். மேலும் வரக்கூடிய 2024ம் ஆண்டு முக்கியமான சவாலாக போதைப்பொருள் தடுப்பை பார்ப்பதாகவும் விபத்துகளை குறைப்பதற்கும் குற்றங்களை குறைப்பதற்கும் சிசிடிவி கேமராக்களை அதிக ப்படுத்த இருப்பதாகவும் இவற்றிற்கெல்லாம் அதிக கவனம் செலுத்தி செயல்பட இருப்பதாக தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment