New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/11/Kovai-police-commissioner-2.jpg)
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக காவல்துறையினருக்கு ட்ரோன் பயிற்சி அளிக்கும் புதிய முயற்சியை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனின் முன்னெடுத்துள்ளார்.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக காவல்துறையினருக்கு ட்ரோன் பயிற்சி அளிக்கும் புதிய முயற்சியை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனின் முன்னெடுத்துள்ளார்.
தற்போது பல்வேறு துறைகளில் ட்ரோன் கேமரா எனப்படும் ஆளில்லா சிறிய வகை விமானங்கள் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. இது போன்ற ட்ரோன் கேமராக்களின் பயன்பாடு காவல்துறை வட்டாரங்களிலும் தற்போது பயன்படுத்தபடுகிறது.
இந்நிலையில், கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கோவை மாநகரில் குற்ற சம்பவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக கோவை மாநகர காவல் ஆணையர் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
இதில் மாநகர பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்க்கு ஒரு தலைமை காவலர் என நியமித்து அவர்களுக்கு டி.ஜி. ட்ரோன் கேமரா பயிற்சி மையம் சார்பாக ட்ரோன் கேமராவை கையாள்வது குறித்து காவல்துறையினருக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடைபெற உள்ள பயிற்சி முகாமை கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
இது குறித்து ட்ரோன் கேமரா பைலட் ராஜ சேகர் நம்மிடம் கூறியதாவது:
ட்ரோன் கேமராவில் உள்ள அப்ளிகேஷன்கள் மற்றும் புதிய வகையிலான நவீன ட்ரோன்களை கையாளும் விதம் குறித்து காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் இதனால் காவல் துறையினரின் சில இடங்களில் செல்ல முடியாத இடங்களுக்கும் இந்த தொழில் நுட்பம் வாயிலாக செயல்பட முடியும் என தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.