/tamil-ie/media/media_files/uploads/2022/12/New-Project11.jpg)
கோவையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நேற்று (டிசம்பர் 17) கலைத் திருவிழா நடைபெற்றது. கிக்கானிக் மேல் நிலைப்பள்ளி அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் 400-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். பேச்சுப் போட்டி, கதை எழுதுதல், கட்டுரை போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியம், தனி நடனம், குழு நடனம், நாட்டுப்புற நடனம் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-18-at-14.28.33.jpeg)
இந்நிகழ்ச்சியில் தொண்டாமுத்தூர் வட்டாரம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவன் நிர்மல் குமாரின் நடனம் அனைவரையும் கவர்ந்தது.
கோவையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் மாற்றுத்திறனாளி மாணவன் நிர்மல் குமாரின் நடனம் அனைவரையும் கவர்ந்தது. மாணவனை ஆட்சியர் சமீரன் கட்டி தழுவி பாராட்டி பேனா பரிசு வழங்கினார்.#Coimbatore | #schoolEducation | #TNGovernment@Anbil_Mahesh
— Indian Express Tamil (@IeTamil) December 18, 2022
செய்தி: பி.ரஹ்மான் pic.twitter.com/cMbWCmvpCc
நிர்மல் குமாரின் நடனத்தையும், தன்னம்பிக்கையையும் பாராட்டிய மாவட்ட ஆட்சியர் சமீரன் மாணவனை கட்டி தழுவி வாழ்த்தி அவருக்கு சான்றிதழ் வழங்கி தன்னுடைய பேனாவை பரிசாக வழங்கி ஊக்குவித்தார். மாணவனின் நடனம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பாராட்டுகள் குவித்து வருகிறது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.