கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக பொருகள் ஜப்தி: பேச்சுவார்த்தைக்குப் பின் நிறுத்தம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களால் பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் மாலை வரை பேச்சுவார்த்தை நடைபெற்றதை தொடர்ந்து தற்காலிகமாக ஜப்தி நடவடிக்கை நிறுத்தி வைக்கபட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களால் பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் மாலை வரை பேச்சுவார்த்தை நடைபெற்றதை தொடர்ந்து தற்காலிகமாக ஜப்தி நடவடிக்கை நிறுத்தி வைக்கபட்டது.

author-image
WebDesk
New Update
covai

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களால் பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் மாலை வரை பேச்சுவார்த்தை நடைபெற்றதை தொடர்ந்து தற்காலிகமாக ஜப்தி நடவடிக்கை நிறுத்தி வைக்கபட்டது.

நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததால் கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த நீதிமன்ற ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் ஜி ராமசாமி இவருக்கு சொந்தமான 18 ஏக்கர் நிலைத்தை 1989 ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டுவதற்காக நிலம் கையெடுப்பு  செய்த நிலையில் அதற்குரிய இழப்பீடு வழங்காமல் இருந்துள்ளது வீட்டு வசதி வாரியம்.

covai

தற்போது வரை ஒரு கோடி 83 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை நிலுவையில் உள்ள நிலையில் இந்த நில உரிமையாளர்களான ஜி ராமசாமி அவரது மகன் சுந்தர்ராஜ், ஜானகி அம்மாள்  மற்றும் மாணிக்கம் ஆகியோர் கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

Advertisment
Advertisements

இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்த நீதிபதி தனலட்சுமி இழப்பீட்டு தொகைக்கான மதிப்பீட்டிற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மூன்று அலுவலகங்களில் உள்ள அசையும் சொத்துகளை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தார்.  அதன் பேரில் தற்போது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த  நீதிமன்ற அமீனா தலைமையிலான குழுவினர் காவல்துறை பாதுகாப்புடன் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று காலை முதல் மாலை வரை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனிடையே அரசு தரப்பில் வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்குள் இழப்பீட்டுத் தொகையை தருவதாக மனுதாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: