Advertisment

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கையில் கத்தியுடன் வந்த பெண்; பரபரப்பு

புகாரின் பேரில் காவல்துறை இதுவரை வழக்கு செய்யப்படவில்லை. ஆகையால் விரக்தி அடைந்த மரகதவல்லி கையில் கத்தியுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார்.

author-image
WebDesk
New Update
Cbe women1.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை மாதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மரகதவல்லி. இவர் நிலத் தகராறு தொடர்பாக பேரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தார். புகாரின் பேரில் இதுவரை வழக்கு செய்யப்படவில்லை. ஆகையால் விரக்தி அடைந்த மரகதவல்லி கையில் கத்தியுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வந்தார். 

Advertisment

இதனை பார்த்த அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக அந்த பெண்ணை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனாலும் அந்த பெண் சமாதானமாகவில்லை. தொடர்ந்து காவல் துறையினர் அந்த பெண் வைத்திருந்த கத்தியை பிடுங்கி விட்டு அவரை பந்தய சாலையில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 

இந்நிலையில் மரகதவல்லி கூறும் போது, என்னை தாக்கிய 3 பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் தொடர்ந்து காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment