/indian-express-tamil/media/media_files/2025/08/24/covai-collector-2-2025-08-24-19-07-33.jpg)
ஆசிரியராக மாறிய கோவை ஆட்சியர்... மாணவர்களுக்கு கணக்குப் பாடம் எடுத்து கலந்துரையாடல்
கோவை சூலூர் அடுத்த பீடம் பள்ளி ஊராட்சிப் பகுதியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், நேரில் ஆய்வு செய்தார். இந்த முகாமில், மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்று, சில கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டதற்கான ஆணைகளையும் பயனாளிகளுக்கு வழங்கினார். அங்கிருந்த மக்களிடம் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்தும் ஆட்சியர் பவன்குமார் கேட்டறிந்தார்.
முகாம் ஆய்வு முடிந்த பின், மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தனது காரில் புறப்படவிருந்தபோது, திடீரென அப்பகுதியில் உள்ள எஸ்.கே.என். அரசு மேல்நிலைப்பள்ளிக்குள் நுழைந்து ஆய்வு செய்தார். பள்ளி மாணவர்களிடம் சத்துணவு மற்றும் பிற வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, 6-ம் வகுப்புக்குள் சென்ற அவர், மாணவர்களிடம் கணக்குப் பாடம் எடுத்தார். அவர் எழுப்பிய கேள்விகளுக்கு சரியாக பதிலளித்த மாணவர்களை பாராட்டினார். மாவட்ட ஆட்சியரின் இந்த திடீர் வருகை ஆசிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.